இடைத்தேர்தல்: பெங்களூரில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம்
இடைத்தேர்தல் தொடர்பாக, பெங்களூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் தொடர்பாக, பெங்களூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள், 2 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-இல் நடைபெறுகிறது.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் மாநிலத்தலைவர் எடியூரப்பா தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. கூட்டத்தில் இடைத்தேர்தலைச் சந்திப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில்தனது மகன் ராகவேந்திரா போட்டியிடுவார் என எடியூரப்பா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாஜகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்டம் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.