முகப்பு
பெங்களூரு

"கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்'

கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா தெரிவித்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:25 AM
பகிர்:

கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா தெரிவித்தார்.
பெங்களூரு சித்ரகலா பரிஷத்தில் சனிக்கிழமை கிராமிய கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் கண்காட்சியைத் தொடக்கி வைத்து அவர் பேசியது: சர்வதேச அளவில் கலை, கலாசாரத்துக்கு புகழ்பெற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. நமது கலைகளுக்கு எடுத்துக்காட்டாக நமது ஓவியம், கைவினைக் கலைஞர்கள் திகழ்கின்றனர். அவர்கள் வரைந்துள்ள ஓவியங்களாகட்டும், கைவினைப்பொருள்களாகட்டும் நம்மை மட்டுமின்றி வெளிநாட்டினரையும் கவர்ந்து இழுக்கும் வண்ணம் உள்ளது. 
தங்கள் துறையில் சிறந்து விளங்கும் பெரும்பாலான கலைஞர்கள் வறுமையில் வாடி வருவது வேதனைக்குரியது. எனவே, ஓவியர்கள், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது நமது கடமையாகும். 
செப். 9-ஆம் தேதி வரை நடைபெறும் கைவினைப்பொருள் கண்காட்சிக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். கலைகளை வகைப்படுத்தி பார்க்காமல் கலைஞர்களை ஊக்குவித்தால் மட்டுமே நமது பாரம்பரியக் கலைகள் செழிக்கும். கலைகளையும், கலைஞர்களையும் ஊக்குவிப்பதில் பெங்களூரு மக்கள் என்றுமே சளைத்ததில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.