பெங்களூரு

குழந்தைகளுக்கு செவித்திறன் சோதனை அவசியம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீ

DIN

குழந்தைகளுக்கு செவித் திறன் பரிசோதனை நடத்துவதை இந்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட்லீ கேட்டுக் கொண்டார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
இந்தியாவில் காது கேளாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பிறக்கும் போதே குழந்தைகளின் காது கேளாமை குறித்த சோதனையை கட்டாயமாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காது கேளாமை பிரச்னையை தொடக்கத்திலே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும். 
உலக சுகாதார மையத்தின் கணக்கெடுப்பில் 34 மில்லியன் குழந்தைகளுக்கு காது கேளாமை பிரச்னை உள்ளது. இது 2050 ஆண்டுக்குள் 900 மில்லியனை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்தியாவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT