நடைபெற உள்ள சட்ட மேலவைத் தேர்தலில் பிராமண சமுதாயத்துக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று ஹெப்பாள் பிராமண மஹா சபையின் தலைவர் சுரேஷ் சாஸ்திரி
தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு அக்டோபர் 3-இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 1 இடத்தை சமூக நீதியின் கீழ் பிராமண சமுதாயத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கர்நாடகத்தின் வளர்ச்சியில் பிராமணர்கள் அதிக அளவில் பங்களிப்பை அளித்துள்ளனர். ஆன்மிகம், கல்வி உள்ளிட்டத் துறைகளில் பிராமணர்கள் சிறந்து விளங்குகின்றனர். எனவே மற்ற சமுதாயமக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வது போல, பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடுசெய்து தர வேண்டும். 3 இடத்துக்கு நடைபெற உள்ள சட்டமேலவை தேர்தலில், ஒரு இடத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார் அவர்.