பெங்களூரு

தங்கச் சங்கிலி பறிப்பு வழக்குகளில் 3 பேர் கைது

DIN

தங்கச் சங்கிலி பறிப்பு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகளைப் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு லக்கேரவைச் சேர்ந்தவர் பிரதீப் (23), கப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (22). இவர்கள் இருவரும் பெங்களூரில் தனியாக செல்லும் பெண்களை அடையாளம் கண்டு, தங்கச் சங்கிலிகளைப் பறித்து வந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், பிரதீப், மஞ்சுநாத்தை கைது செய்தனர். 
பறித்த தங்கச் சங்கிலிகளை விற்பனை செய்ய உதவிய சுனில் (29) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 265 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விஜயநகர் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT