பெங்களூரு

மரம் சாய்ந்து விழுந்ததில் பள்ளி வாகனம் சேதம்

DIN

மழைக்கு மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பள்ளி வாகனம் சேதமடைந்தது.
தென்கன்னட மாவட்டம், மங்களூரில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை காலை தனியாருக்கு சொந்தமான பள்ளி வாகனம் 17 மாணவர்களுடன், மங்களூரு நந்தூர் சதுக்கம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 66 இல் சென்று கொண்டிருந்தது. 
அப்போது, எதிர்பாராதவிதமாக மழைக்கு சாலையோரமிருந்த மரம் வேரோடு சாய்ந்து பள்ளி வாகனம், எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி மீது சாய்ந்தது. இதனால் பள்ளி வாகனம் சேதமடைந்தது. வாகனத்தின் உள்ளே அமர்ந்திருந்த மாணவர்கள் காயமின்றி தப்பினர். தகவல் அறிந்த போலீஸார், பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT