பெங்களூரு

டிப்பர் லாரி மோதியதில் 4 பேர் பலி

டிப்பர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

DIN

டிப்பர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு சர்ஜாபுராவில் தங்கி, மென்பொறியாளராகப் பணியாற்றி வந்த அஞ்சனி யாதவ் (31). திங்கள்கிழமை நள்ளிரவு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸ்நேகா (28), துருவ் (2), சுப்ரு சந்தோஷ் (27), சந்தோஷ், சஞ்சீவ் ஆகியோருடன் காரில் வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். 
பெங்களூரு ஊரகம் அத்திப்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத் தடுப்புச்சுவரில் மோதிவிட்டு, பின்னர் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அஞ்சனி யாதவ், ஸ்நேகா, துருவ், சுப்ருசந்தோஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த சந்தோஷ், சஞ்சீவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சர்ஜாபுரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT