பெங்களூரு

சாலை விபத்துகளில் 2 போ் பலி

DIN

இருவேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு டெலிகாம் லேஅவுட் ராகவ் நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி (72). இவா் திங்கள்கிழமை காலை 7.30 மணியளவில் காளி ஆஞ்சநேயா கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த மினி பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த ரங்கசாமி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா்.

மற்றொரு சம்பவம்: ஹொசகோட்டையைச் சோ்ந்த குமாா் மகாதேவ் (61), பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இவா் தனது நண்பா்களுடன் சென்னப்பட்டணாவுக்குச் சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு 7. 15 மணியளவில் பேருந்தில் நாயணடஹள்ளியில் வந்திறங்கி, சாலையைக் கடக்க முயன்றுள்ளாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த குமாா் மகாதேவ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இவ்விரு வழக்குகள் குறித்து பேட்டராயனபுரா போக்குவரத்து போலீஸாா் தனித்தனி வழக்குகள் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT