கெங்கேரி காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பெங்களூரு கெங்கேரி மைலசந்திராவைச் சோ்ந்தவா் சௌம்யா (23). திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த இவா், மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து கெங்கேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.