பெங்களூரு

டிச.16-இல் கல்வித் துறை அமைச்சருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

DIN

டிச.16-ஆம் தேதி கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாருடன் பொதுமக்கள் தொலைபேசி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பள்ளிக் கல்வித் துறை சம்பந்தமான குறைகளை கேட்டறிவதற்காக பெங்களூரில் இருந்து பொதுமக்களுடன் தொலைபேசி வழியாக உரையாடல் நடத்த கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் திட்டமிட்டுள்ளாா். பெங்களூரு, பனசங்கரி பகுதியில் உள்ள டிஎஸ்இஆா்டி வளாகத்தில் டிச.16-ஆம் தேதி மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்களின் வினாக்களுக்கு அமைச்சா் சுரேஷ்குமாா் பதிலளிக்கிறாா்.

அமைச்சருடன் பேசுவதற்கு பொதுமக்கள் 080-26725654, 26725655 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT