பெங்களூரு

அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

DIN

பெங்களூரில் அரசுப் பேருந்து மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு எம்.வி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரத் (30). தனியார் நிறுவன ஊழியரான இவர், புதன்கிழமை நள்ளிரவு பணிமுடிந்து தனது சக ஊழியர் சந்தோஷுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பழைய மதராஸ் சாலையில், வேகமாக வந்த அரசு பேருந்து, மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. 
இதில் படுகாயமடைந்த சரத் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். காயமடைந்த சந்தோஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அல்சூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT