இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 2 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவைச் சேர்ந்தவர்கள் ஜான்பீட்டர் (19), கிஷோர் (19). இவர்கள் இருவரும் மைசூரில் சாலையோரங்களில் நிறுத்தி வைத்துள்ள இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தனராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், 2 பேரையும் கைது செய்து, ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 4 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மோட்டகஹள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.