பெங்களூரு

புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 பேர் விண்ணப்பிப்பு

நடப்பு கல்வியாண்டில் புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

DIN

நடப்பு கல்வியாண்டில் புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கல்வித் துறை இயக்குநர் ஷிகா செய்தியாளர்களிடம் கூறியது: மாநில அளவில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 1,231 முதல் நிலைக் அரசு கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரிகளைவிட, தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. 
2010-11-ஆம் ஆண்டில் கல்வியாண்டில் 1,737-ஆக இருந்த தனியார் கல்லூரிகள், 2018-19-ஆம் ஆண்டில் 3,194-ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் நடப்பு கல்வியாண்டில் புதிதாக முதல்நிலைக் கல்லூரிகள் தொடங்க 425 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் தென் பெங்களூரில் கல்லூரிகள் தொடங்க அதிக பேர் விண்ணப்பித்துள்ளனர். வட கர்நாடகம், குடகு மாவட்டங்களில் குறைந்தபட்சமாக ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன என்றார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT