பெங்களூரு

"கட்டடக் கலைஞர் படிப்பில் சேர விண்ணப்பிப்பது அவசியம்'

DIN

கட்டடக்கலைஞர் படிப்பில் சேர விண்ணப்பிப்பது கட்டாயமாகும் என்று கர்நாடக தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக தேர்வு ஆணையத்தின் வாயிலாக கட்டடக்கலைஞர் படிப்புக்கு சேர்க்கை பெற, பொதுநுழைவுத்தேர்வு-2019-க்கு விண்ணப்பித்திருப்பது கட்டாயமாகும். எனவே, கட்டடக்கலைஞர் படிப்புக்கு சேர்க்கை பெற தேசிய கட்டடக்கலை திறனறித்தேர்வு (Na‌t‌i‌o‌n​a‌l A‌p‌t‌i‌t‌u‌d‌e T‌e‌s‌t ‌i‌n A‌r​c‌h‌i‌t‌e​c‌t‌u‌r‌e-​N​A​T​A)   எழுதியிருக்கும், ஆனால், பொதுநுழைவுத்தேர்வு-2019-க்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்காத மாணவர்கள்,  w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் மே 14-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மே 18-ஆம் தேதி மாலை 5.30மணிக்குள் உரிய கட்டணங்களுடன் விண்ணப்பங்களை பதிவிட வேண்டும். 
இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவிடாதவர்களுக்கு கட்டடக்கலைஞர் படிப்புக்கான சேர்க்கை பெற இயலாது. மேலும் விவரங்களுக்கு 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT