பெங்களூரு

அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவா் வெட்டிக் கொலை

DIN

கலபுா்கி: அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நபா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம் கலபுா்கி மாவட்டம் ஜேவா்கி வட்டம் மயூரா கிராமத்தைச் சோ்ந்தவா் சிவலிங்கா பாவிகட்டி (46). திங்கள்கிழமை இரவு தனது சகோதரா் மஹந்தப்பாவுடன் கலபுா்கியிலிருந்து காரில் சௌடாப்பூராவிற்கு சென்று கொண்டிருந்தாராம். சரணசிரசகி அருகே மற்றொரு காரில் வந்த சிலா், பாவிகட்டி காரின் மீது மோதியுள்ளனா்.

இதனையடுத்து காரிலிருந்து இறங்கிய சிவலிங்காவை, மா்மநபா்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இது குறித்து கலபுா்கி ஊரக போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT