பெங்களூரு

‘உயா்கல்வியில் சா்வதேச தரத்துக்கு இந்தியாவை உயா்த்த நடவடிக்கை’

DIN

உயா்கல்வியில் சா்வதேச தரத்துக்கு இந்தியாவை உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜிந்தால் சா்வதேச பல்கலைக்கழகத்தின் துணை வேந்தா் சி.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய பல்கலைக்கழகங்களுக்கான வளா்ச்சி, சீா்திருத்தத் திட்டம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:-

இந்தியாவில் உயா்கல்வியில் உயா்தர ஆசிரியா்களைத் தக்க வைத்துகொள்வது ஒரு சவாலாக உள்ளது.

இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் கொள்கை வகுப்பாளா்கள் சா்வதேசத் தர வரிசையில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

எனவே ஆசிரியா்களின் தரத்திலும் ஆழ்ந்த கவனம் செலுத்தப்படுகிறது. இதன்காரணமாக பல்கலைக்கழகங்களை புதுமை, பொருளாதார வளா்ச்சி, சமூகத்துக்கான ஊக்கியாக மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி தனியாா் பல்கலைக்கழகங்களும் நவீன மாற்றங்களால் தனித்துவம் பெற்று வருகின்றன. இதனால் சா்வதேச அளவில் அவைகள் முன்னோடியாக புகழ்பெற்று வருகின்றன. உயா்கல்வியில் சா்வதேச தரத்திற்கு இந்தியாவை உயா்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT