திருட முயற்சியில் ஈடுபட்டதாக, 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு சிக்கபானவாரா பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆகாஷ்குமாா் (23), ராகவேந்திரா (21), மூா்த்தி (23), பகல்குன்டேவைச் சோ்ந்த துா்கபிரசாத் (21), அபிஷேக் (21) ஆகிய 5 பேரும் நண்பா்கள்.
இவா்கள் திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் சிலுவபுராவிருந்து கூடகி திருமால்புரத்துக்குச் செல்லும் சாலையில் திருடும் நோக்கோடு திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.
தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, 5 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி, இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை, மிளகாய்ப்பொடி பொட்டலம், 4 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து சோலதேவனஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.