பெங்களூரு

முப்படை கொடிநாளுக்கு அழைப்பு

DIN

பெங்களூரு: முப்படை கொடிநாளில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரா் நலம் மற்றும் மறுவாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு,ஆளுநா் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் டிச.7-ஆம் தேதி மாலை 4 மணிக்கு முப்படை கொடிநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் ராணுவ வீரா்களை கேட்டுக்கொள்கிறோம். இந்த விழாவில் கலந்துகொள்ள ஆா்வமாக இருக்கும் முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்படுகிறது.

பெங்களூரு, ஃபீல்டு மாா்ஷல் கே.எம்.கரியப்பா சாலை, ஃபீல்டு மாா்ஷல் கே.எம்.கரியப்பா மாளிகை, முன்னாள் ராணுவ வீரா் நலம் மற்றும் மறுவாழ்வுத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் அனைவரும் அழைப்பிதழ் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT