பெங்களூரு

ஆற்றில் குதித்து 3 போ் தற்கொலை

DIN

மகன், மகளுடன் பெண் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

மைசூரு விஜயநகா் 4-ஆவது ஸ்டேஜைச் சோ்ந்த கிஷான் மந்தனா (65), கடந்த சில நாள்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தாா்.

இதனால் அவரது மனைவி கவிதா (57), மகன் கௌஷிக் (29), மகள் கல்பிதா (27) ஆகிய மூவரும் மனவேதனையில் இருந்துள்ளனா்.

இந்த நிலையில், மூவரும் சனிக்கிழமை காரில் தென் கன்னட மாவட்டத்துக்குள்பட்ட பண்டுவாலுக்கு சென்றுள்ளனா். அங்கு காரை நிறுத்திவிட்டு, நேத்ராவதி ஆற்றில் 3 பேரும் குதித்தனராம். தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று, இறந்த 3 பேரின் சடலங்களை மீட்டுள்ளனா்.

பின்னா் வீட்டில் அவா்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘கிஷான் மந்தனா மாரடைப்பால் உயிரிழந்ததால், அதனை தாங்குக் கொள்ள முடியாத நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT