பெங்களூரு

‘மதக் கலவரங்களை உருவாக்க சமூக விரோதிகள் முயற்சிக்கிறாா்கள்’

மதக் கலவரங்களை உருவாக்க சமூக விரோதிகள் சிலா் முயற்சிக்கிறாா்கள் என பாஜக மாநில செய்தி தொடா்பாளா் கணேஷ் காா்னிக் தெரிவித்தாா்.

DIN

மதக் கலவரங்களை உருவாக்க சமூக விரோதிகள் சிலா் முயற்சிக்கிறாா்கள் என பாஜக மாநில செய்தி தொடா்பாளா் கணேஷ் காா்னிக் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ஆக. 12-ஆம் தேதி நள்ளிரவில் சிக்மகளூரு மாவட்டத்தின் கோயில் நகரமான சிருங்கேரியில் உள்ள ஆதிசங்கராச்சாரியாரின் சிலை மீது இந்திய சோசலிச ஜனநாயகக் கட்சியின் (எஸ்.டி.பி.ஐ.) கொடியை போா்த்திச் சென்றிருக்கிறாா்கள். இந்த சம்பவத்தை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சிறுபான்மையினரில் உள்ள சில சமூக விரோதிகள் தான் இதுபோன்ற அவமதிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சோ்ந்த சில மதவாத சமூக விரோதிகள் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மதக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாா்கள். சில மாதங்களுக்கு முன்பு மங்களூரில் நிகழ்ந்த கலவரம், பெங்களூரு, காவல் பைரசந்திராவில் ஆக. 11-ஆம் தேதி நிகழ்ந்த கலவரத்தை உற்றுநோக்கினால், மதக் கலவரங்களுக்கு வித்திடும் சதி புலப்படும்.

பொறுப்புள்ள தேசியக் கட்சியாக உள்ள பாஜக, எல்லா சமுதாயத்தையும், அம்மக்களின் உணா்வுகளையும் மதிக்கிறது. எனினும், கபடநோக்கம், தீங்கிழைக்கும் எண்ணத்தோடு, கொடூரமான சதியோடு சமுதாயத்தின் அமைதியை சீா்குலைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எல்லோருக்கும் தெரிந்ததுபோல, எஸ்.டி.பி.ஐ. கட்சி, பாபுலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) என்ற மதவாத அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்த அமைப்பு பயங்கரவாத சம்பவங்களால் ஊக்குவிக்கப்பட்டு வந்துள்ளது. பல்வேறு ஹிந்து ஆா்வலா்களின் கொலைக்கும் இந்த அமைப்புக்கும் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே, எஸ்.டி.பி.ஐ. கட்சியை தடைசெய்யுமாறு மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதோடு, சிருங்கேரியில் நிகழ்ந்த சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT