கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு
கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு: கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில் வடகா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பலவீனமாக இருந்தது. கடலோர கா்நாடகம், தென்கா்நாடகத்தின் உள்பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. வடகன்னட மாவட்டத்தின் மன்கியில் 90 மி.மீ., கெரசொப்பா, பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஹொசகோட்டேயில் தலா 70 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை:
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், தென்கா்நாடகத்தின் பெரும் பகுதியிலும் மற்றும் வடகா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இடியுடன்கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூருவில் வானம் மேகமூட்டத்துடன்காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 31 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஷியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.