முகப்பு
இந்தியா

விமானங்களில் 60% இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் கூடாது! மத்திய அரசு

இனி விமானங்களில் விருப்பம்போல் 60% இருக்கைகளை தேர்வு செய்யலாம்...

Updated On : 18 மார்ச், 2026 at 6:41 AM
கோப்புப்படம்
பகிர்:

விமானங்களில் 60 சதவீத இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

உலகளவில் உள்நாட்டு விமானப் பயணிகளை கையாளுவதில் இந்தியா மூன்றாவது நாடாக இருக்கின்றது. இந்திய விமான நிலையங்கள் நாளொன்றுக்கு 5 லட்சம் பயணிகளை கையாண்டு வருகின்றன.

விமானங்களில் பயணம் செய்ய ஜன்னல் இருக்கைகள், முன்பக்க இருக்கைகள் போன்றவற்றை தேர்வு செய்வதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகின்றன.

இந்த நிலையில், அனைத்து விமானங்களிலும் 60 சதவீத இருக்கைகளை தேர்வு செய்வதற்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒன்றாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒன்றாக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யவும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக் கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கு செயல்பாட்டு விதிமுறைகளுக்குட்பட்டு உகந்த வசதிகளை செய்து தரவேண்டும். செல்லப்பிராணிகளை விமானத்தில் கொண்டு செல்வதற்கான வெளிப்படையான கொள்கைகளை நிறுவனங்கள் வெளியிட வேண்டும்.

விமான நிறுவனங்களின் இணையதளங்கள், மொபைல் செயலிகள், முன்பதிவுத் தளங்கள் மற்றும் விமான நிலைய கவுண்டர்கள் முழுவதும் பயணிகளின் உரிமைகளை உள்ளூர் மொழிகளில் தெளிவாகக் காட்சிப்படுத்துதல் வேண்டும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

summary

No additional charges for 60% of seats on flights! Central Government

முழு கட்டுரையைப் படிக்க →