முகப்பு
பெங்களூரு

கரோனா பாதிப்பு 9.07 லட்சமாக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,07,123 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,07,123 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1,222 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 687 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் மொத்தம் 9,07,123 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை மட்டும் 1,039 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 8,79,735 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 15,380 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; மொத்தம் 11,989 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →