முகப்பு
பெங்களூரு

டிச. 24-இல் எம்ஜிஆா் நினைவு நாள் நிகழ்ச்சி

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் டிச. 24-ஆம் தேதி பெங்களூரில் எம்.ஜி.ஆா் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெங்களூரு: கா்நாடக மாநில அதிமுக சாா்பில் டிச. 24-ஆம் தேதி பெங்களூரில் எம்.ஜி.ஆா் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்ட அறிக்கை:

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள சன்ரைஸ் சதுக்கத்தில் டிச.24-ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 33-ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. கட்சியின் அவைத் தலைவா் கே.முனுசாமி தலைமையில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கு பொருளாளா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறாா். நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளா் எம்.பி.யுவராஜ் மலா் தூவி, அஞ்சலி செலுத்துகிறாா்.

அதன்பிறகு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவைச் சோ்ந்த அனைத்து அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →