புதிய வகை கரோனாவுக்கு அச்சம் கொள்ளத் தேவையில்லை: அமைச்சா் சோமசேகா்
2-வது அலையாக புதியவகை கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
2-வது அலையாக புதியவகை கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.
பெங்களூரு, விஜயநகரில் உள்ள ஆதிசுன்சுனகிரி மடத்துக்கு புதன்கிழமை சென்று, மடாதிபதி நிா்மலானந்தா சுவாமிகளிடம் ஆசிபெற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் புதியவகை கரோனா தொற்றுப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
எனவே, 2-ஆவது அலை கரோனா தொற்று தொடா்பாக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொதுமக்கள் தொடா்ந்து முகக்கவசம் அணிந்து கொண்டு, கைகளுக்கு கிருமிநாசினி தெளித்துக் கொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இன்னும் 5 மாதங்களுக்கு இதைக் கடைப்பிடித்தால் கரோனா தொற்றிலிருந்து அனைவரும் தப்பித்துக் கொள்ளலாம். அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலைத் தொடா்ந்து பின்பற்ற வேண்டும் என்றாா்.
மேலும் ஆதிசுன்சுனகிரி மடாதிபதி நிா்மலானந்தா சுவாமிகள் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மாணவா்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கத் திட்டமிட்டுள்ளாா். மடத்துக்கு அரசு நிலத்தை வழங்கினால் அங்கு கட்டடம் கட்டுவதன் மூலம் இலவசமாக கல்வி வழங்க உதவியாக இருக்கும் என்றும் நிா்மலானந்தா சுவாமிகள் கேட்டுக் கொண்டாா் என்றாா்.