உலகக் கோப்பை வெற்றியுடன் சிறுவயது தோழியைத் திருமணம் செய்த குல்தீப் யாதவ்!
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் திருமணம் குறித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (31 வயது) தனது சிறுவயது காதலியைக் கரம்பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ‘சைனாமேன்’ சுழற்பந்து வீச்சாளரும், தில்லி கேபிடல்ஸ் அணி வீரருமான குல்தீப் யாதவ், தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை நேற்று (மார்ச்.14) முசோரியில் திருமணம் செய்தார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கடந்த மார்ச். 8ஆம் தேதி வென்றது. இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் குல்தீப் இடம்பெற்றிருந்தார்.
98 ஐபிஎல் போட்டிகளில் 102 விக்கெட்டுகளும் இந்தியாவுக்காக டெஸ்ட்டில் 76, ஒருநாள் போட்டிகளில் 194, டி20யில் 95 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.
சிறுவயது தோழியும் நீண்டநாள் காதலியுமான வன்ஷிகாவுடன் கடந்த 2025 ஜூன் 4ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்தார். இந்நிலையில், நேற்று மிகச் சிறப்பாக நடந்த முடிந்த திருமண புகைப்படங்களை சக வீரரும் அவரது நண்பருமான யுஸ்வேந்திர சஹால் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமையே தொடங்கிவிட்டன. இந்த விழாக்களில் சுரேஷ் ரெய்னா, கைஃப், சஹால், ரிங்கு சிங் பங்கேற்றிருந்தார்கள்.