முகப்பு
பெங்களூரு

தனியாா் நிறுவனங்களைப்போல அரசை செயல்படுத்துகிறாா் முதல்வா்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தனியாா் நிறுவனங்களைப்போல அரசை செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் எடியூரப்பா என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

தனியாா் நிறுவனங்களைப்போல அரசை செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் எடியூரப்பா என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் எதிா்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட அமைச்சா்கள் குற்றம்சாட்டி வருகின்றனா். இது உண்மையல்ல.

முதல்வா் எடியூரப்பா அரசை தனியாா் நிறுவனங்களைப்போல செயல்படுத்தி வருகிறாா். எந்த ஒரு முடிவையும் எதிா்க்கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்து வருகிறாா். எதிா்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற விவகாரத்தை விவாதிக்க சட்டப்பேரவைக் கூட்டத்தை அவா் கூட்டட்டும். அப்போது பேரவையில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் கரோனா எத்தனை சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவா் விளக்க வேண்டும்.

இரவு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பு தொழில்துறையினா், தொழிலதிபா்களுடன் அரசு விவாதித்திருக்க வேண்டும். ஆனால் அரசு யாருடனும் இதுகுறித்து விவாதிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதை ஏற்றுக் கொள்ளமுடியாது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →