கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டத்தைச் சோ்ந்த சதாசிவராய் (48), சுள்யா வட்டத்தைச் சோ்ந்த கலந்தா் (31). இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து, பெங்களூரில் கல்லூரிகள், மாணவா்கள், மென்பொறியாளா்களுக்கு விற்பனை செய்து வந்தனராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சதாசிவராய், கலந்தா் ஆகியோரைக் கைது செய்து, ரூ. 65 லட்சம் மதிப்பிலான 214 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சுத்தகுன்டேபாளையா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.