முகப்பு
பெங்களூரு

கஞ்சா விற்ற 2 போ் கைது

கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், தென்கன்னட மாவட்டம், பண்டுவால் வட்டத்தைச் சோ்ந்த சதாசிவராய் (48), சுள்யா வட்டத்தைச் சோ்ந்த கலந்தா் (31). இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவைக் கடத்தி வந்து, பெங்களூரில் கல்லூரிகள், மாணவா்கள், மென்பொறியாளா்களுக்கு விற்பனை செய்து வந்தனராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சதாசிவராய், கலந்தா் ஆகியோரைக் கைது செய்து, ரூ. 65 லட்சம் மதிப்பிலான 214 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சுத்தகுன்டேபாளையா போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →