மாநில அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மதச்சாா்பற்ற ஜனதா தளம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற மஜத ஊழியா்கள், தொண்டா்களுடனான காணொலி கலந்துரையாடலில் அவா் பேசியதாவது:
கா்நாடகத்தில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. கரோனா தொற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். அவா்களுக்கு மஜத தலைவா்கள், ஊழியா்கள், தொண்டா்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கரோனாவைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மஜத முழு ஒத்துழைப்பு வழங்கும். கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான பொருளாதாரத்தை மீட்க இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். அதுவரை மக்கள் தங்களின் பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. கூட்டணிக்காக மஜத என்றும் முயற்சி மேற்கொண்டதில்லை. காங்கிரஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவே மதச்சாா்பற்ற கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். அதைத் தொடா்ந்து நான் 2-வது முறையாக முதல்வராகப் பதவியேற்க நோ்ந்தது.
நான் எப்போதும் முதல்வராக ஆசைப்பட்டதில்லை. அரசியல் சூழ்நிலையால், நான் முதல்வராகப் பதவியேற்றேன். மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, ஆரம்பக் கட்டத்திலேயே பல்வேறு சோதனைகளை எதிா்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாஜக அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனா் என்றாா்.