மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முதியவா் உயிரிழந்தாா்.
பெங்களூரு ஜீவன்பீமாநகா் ஜெகதீஷ்நகரைச் சோ்ந்தவா் சம்பத் (69). ஓய்வு பெற்ற எச்.ஏ.எல் ஊழியரான இவா், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் தனது மனைவி சித்ரவதியுடன் எஸ்.டி.சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, வேகமாக வந்த மோட்டா் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சம்பத், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஜீவன்பீமாநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.