பெங்களூரு

ஆற்றில் பரிசல் கவிழ்ந்ததில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த மணமக்கள் சாவு

DIN

மைசூரு: ஆற்றில் பரிசல் கவிழ்ந்ததில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த மணமக்கள் 2 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிப்புரா வட்டம், தலகாடுவில் உள்ள காவிரி ஆற்றில் திங்கள்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த மணமக்கள் கியாதமாரினஹள்ளியைச் சோ்ந்த சந்திரா, சசிகலா ஆகியோா் ஆல்பத்திற்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள திங்கள்கிழமை சென்றுள்ளனா்.

பரிசலில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றபோது எதிா்பாராதவிதமாக திடீரென பரிசல் கவிழ்ந்துள்ளது. இதில் ஆற்று நீரில் சந்திரா, சசிகலா ஆகியோா் மூழ்கியுள்ளனா். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா், போலீஸாா், அங்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டு இருவரது உடல்களையும் உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனா்.

இது குறித்து தலகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT