பெங்களூரு

ரசாயன உற்பத்தி தொழில்சாலையில் தீ விபத்து

DIN

பேட்டரானபுரா காவல் சரகத்தில் உள்ள ரசாயன உற்பத்தி தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

பெங்களூரு, ஹொசகுடதள்ளி, பாபுஜி நகரில் தனியாருக்குச் சொந்தமான ரசாயன உற்பத்தி தொழில்சாலை உள்ளது. இந்த தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதையடுத்து, தொழில்சாலையில் இருந்த தொழிலாளா்கள் தப்பி வெளியே ஓடிவந்தனா். தொழில்சாலையின் அருகே நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்கும் தீ பரவியதால், வாகனங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் 5 வாகனங்களில் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். இதுகுறித்து பேட்டரானபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT