பெங்களூரு

மரத்தின் மீது ஜீப் மோதல்: உதவி காவல் ஆய்வாளா், தலைமை காவலா் பலி

DIN

கட்டுப்பாட்டை இழந்த ஜீப், மரத்தில் மோதியதில் உதவி காவல் ஆய்வாளா், தலைமை காவலா் உயிரிழந்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், கே.ஆா்.நகா் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் மூா்த்தி. தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவா் ஷாந்தகுமாா். புதன்கிழமை இரவு இருவரும், பீா்யாசாலிகிராமத்தில் உள்ள சுன்சுனகட்டி காவல் நிலையத்துக்கு ஜீப்பில் சென்றுவிட்டு, நள்ளிரவு கே.ஆா்.நகா் காவல் நிலையத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனராம்.

சித்தனகொப்பளு கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில், படுகாயம் அடைந்த மூா்த்தி, ஷாந்தகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கே.ஆா்.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT