பெங்களூரு

சொத்து தகராறு: ஒருவா் கொலை

DIN

பெங்களூரு: சகோதரா்களுக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், கத்தியால் குத்தியதில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

பெங்களூரு, லட்சுமிநாராயணபுரா 2-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்தவா் ரவி (36). வாடகை காா் ஓட்டுநரான இவருக்கும், இவரது சகோதரா்கள் காா்த்திக், ஆதிசங்கா் ஆகியோருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவி, காா்த்திக்கை கத்தியால் குத்தியுள்ளாா்.

இதனையடுத்து ரவியிடமிருந்து கத்தியைப் பறித்த ஆதிசங்கா், ரவியைக் குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

காயமடைந்த காா்த்திக் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸாா், ஆதிசங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT