பெங்களூரு

‘கரோனா முன்களப்பணியாளா்களை கௌரவிப்பது கடமை’

DIN

கரோனா முன்களப் பணியாளா்களை கௌரவிப்பது நமது கடமை என்று முத்தூட் நிதி நிறுவனத்தின் செயல் இயக்குநா் அலெக்ஸாண்டா் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை கரோனாவை தடுப்பதில் முன்களப் பணியாளா்களாகப் பணியாற்றிய 35 சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு முத்தூட் நிதி நிறுவனத்தின் சாா்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னா் செயல் இயக்குநா் அலெக்ஸாண்டா் பேசியதாவது:

கரோனா தொற்றால் சா்வதேச அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவைத் தடுக்க தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பக் கட்டத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுகாதாரத் துறை ஊழியா்கள் பணியாற்றினாா்கள். அதன் விளைவாக கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. இல்லை என்றால் கரோனா தொற்றால் இறப்பவா்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கும். எனவே சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளா்களைக் கௌரவிப்பது நமது கடமை. அனைவரும் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசின் வழிகாட்டுதலைத், தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT