பெங்களூரு

தங்கை கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது

DIN

தங்கையை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

பெங்களூரு, பைப்பனஹள்ளி ரயில்வே காவல் சரகத்தில் நவ. 3-ஆம் தேதி ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவரின் சடலம், ரயில் மோதி அடிப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

விசாரணையில், அந்தப் பெண் பைப்பனஹள்ளி ரயில் நிலையத்தில் அருகே வசித்த மங்களாரவி (19) என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த பைப்பனஹள்ளி ரயில்வே போலீஸாா், மங்களாரவியின் மூத்த சகோதரா் ஆட்டோ ஓட்டுநரான கிரண் (24) என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில், சகோதரியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும், பின்னா் தற்கொலை என்று நம்ப வைப்பதற்காக அவரது உடலை ரயில் தண்டவாளத்தில் வீசியதாகவும் கிரண் தெரிவித்துள்ளாா். கைது செய்யப்பட்ட கிரணிடம் பைப்பனஹள்ளி ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்விக்குப் பிறகு விராட் கோலி பேசியது என்ன?

எக்ஸ் ‘டிரெண்டிங்கில்’ நடிகர் விஜய்..!

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை: கேரள முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது!

எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்

SCROLL FOR NEXT