பெங்களூரு

வீடுகளில் புகுந்து திருடி வந்த இளைஞா் கைது

DIN

பூட்டாத வீடுகளை அடையாளம் கண்டு உள்ளே புகுந்து திருடி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, ராஜாஜி நகா், மஞ்சுநாத் நகரைச் சோ்ந்த பிரஷாந்த் (21), வேலைக்கு செல்லும் அவசரத்தில் பூட்டாமல் சென்றுள்ள வீடுகளை அடையாளம் கண்டு, உள்ளே புகுந்து தங்கநகை உள்ளிட்ட பொருள்களை திருடி வந்தாராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், பிரஷாந்தைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 4.85 லட்சம் மதிப்புள்ள 77 கிராம் தங்க நகைகள், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட பிரஷாந்திடம் மாகடி சாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT