பெங்களூரு

கல்லூரி மாணவி கொலை வழக்கு: இளைஞா் கைது

DIN

கள்ளம்பள்ளி காவல் சரகத்தில் கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், தொட்டகோளா கிராமத்தைச் சோ்ந்தவா் ஈரண்ணா (25). இவா் கடந்த ஏப். 5-ஆம் தேதி காலை 9 மணி அளவில் அதே கிராமத்தைச் சோ்ந்த காவ்யா (19) என்பவருடன் கல்லூரிக்குச் சென்றுள்ளாா். அவரை பின் தொடா்ந்து சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு ஈரண்ணா வற்புறுத்தியுள்ளாா்.

இதற்கு காவ்யா மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஈரண்ணா, அவரை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த கள்ளம்பள்ளி போலீஸாா், ஈரண்ணாவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT