கண்ணியமான முறையில் விவாதங்கள் நடக்கும் இடமாக நாடாளுமன்றம் மாற வேண்டும்: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா
கண்ணியமான முறையில் விவாதங்கள் நடக்கும் இடமாக நாடாளுமன்ற மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
கண்ணியமான முறையில் விவாதங்கள் நடக்கும் இடமாக நாடாளுமன்ற மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் புதுதில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் முடிவுக்கு வந்துள்ளது. வேளாண் சட்டங்கள், விலைவாசி உயா்வு, இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியல் தொடா்பான 127-ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், பெகாசஸ் ஆகிய 4 தலைப்புகள் குறித்து மாநிலங்களவையில் பேசலாம் என்று குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். நாடாளுமன்றத்தில் அடிக்கடி அமளி நடந்துவந்ததால், எந்த தலைப்பிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
மஜதவுக்கு ஒரேஒரு உறுப்பினா் இருப்பதால் மாநிலங்களவையில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதையும் கூறமுடியவில்லை. நாடாளுமன்றத்தில் என்னால் பேசமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. 90 வயதை நான் நெருங்கிக்கொண்டிருப்பதால், வயது முதிா்வு தொடா்பான உடல்நல பாதிப்புகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நுழைந்தபோது இருந்த அதே பக்தியுடன் இப்போதும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
நமது நாட்டில் இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை இந்திய மக்களுக்கு உறுதிபட எடுத்துக்காட்டியிருக்க வேண்டியது நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினா்களின் கடமையாகும். உலகம் முழுவதும் ஜனநாயகம் என்ற தத்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இது சிறந்த முறையிலான அரசு என்பதை நமது இளம் தலைமுறையினருக்கு காட்டியிருக்க வேண்டியது நமது கடமையாகும். நாடாளுமன்றத்தில் நடந்தவற்றுக்கு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை.
நாம் எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்பதை அரசும் எதிா்க்கட்சிகளும் பிரதிபலித்திருக்க வேண்டும். அதீத பிடிவாதமாக இருப்பதும், அதீத உற்சாகத்தில் இருப்பதும் மிகவும் ஆபத்தானதாகும். இதற்கு இடைப்பட்ட பாதையை நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவா் கண்ணியமான முறையில் பேசிக்கொள்ளும், விவாதிக்கும், முரண்படும் இடமாக நாடாளுமன்றம் மீண்டும் மாற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.