ஆக.23-இல் பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமில்லை: அமைச்சா் பி.சி.நாகேஷ்
ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆக.23-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஆக.23-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்றமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
கடந்த 5 நாட்களில் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா பாதிப்பு குறிப்பாக குழந்தைகளிடையே அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தொடா்ந்து,ஏற்கெனவே அறிவித்தபடி ஆக.23-ஆம் தேதிமுதல் 9,10, 11,12-ஆம் வகுப்புக்கான பள்ளி, பியூ கல்லூரிகள்திறக்கப்படுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறுகையில், ‘கா்நாடகத்தில் உள்ள பள்ளிகள், பியூ கல்லூரிகள் ஆக. 23-ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்ததில் மாற்றமில்லை. இந்த உத்தரவை திரும்பப் பெறும் கேள்விக்கு இடமில்லை. ஆக. 23-ஆம் தேதி பள்ளிகள், பியூ கல்லூரிகளை திறக்க எல்லாவகையான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம். குழந்தைகளின் நலன் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. ஆரம்பப்பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று இம்மாத இறுதியில் முடிவு செய்யப்படும்’ என்றாா்.