சி.ராஜனின் துணைவியாா் மறைவு: பெங்களூரு தமிழ்ச் சங்கம் இரங்கல்
கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவா் சி.ராஜனின் துணைவியாா் மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவா் சி.ராஜனின் துணைவியாா் மறைவுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவா் கோ.தாமோதரன், செயலாளா் மு.சம்பத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களுரு தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் தமிழ் இனம், மொழி உணா்வாளரும் கா்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவருமான சி.ராஜனின் துணைவியாா் திருமணிதேவி புதன்கிழமை (ஆக. 19) இயற்கை ஏய்தினாா். அவரை இழந்து வாடும், சி.ராஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் இரங்கல் தெரிவிக்கிறோம்.
மறைந்த திருமணிதேவியின் உடலுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் இல.பழனி, துணைச் செயலாளா் கோவிந்தராஜன், செயற்குழு உறுப்பினா் சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தினா் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.