ஓராண்டு கழித்து ஓடிடியில் வெளியான சப்தம்!
சப்தம் திரைப்படம் ஓடிடியில்...
சப்தம் திரைப்படம் நீண்டகாலம் கழித்து ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் திரைப்படத்தில் தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இணைந்திருந்தார்.
ஹாரர் திரைப்படமாக உருவான இது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தொழில்நுட்ப ரீதியாக பெரிய கவனத்தைப் பெற்றது. முக்கியமாக, படத்தின் ஒலியமைப்பு பிரமாதமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நல்ல முயற்சி என்றே கருதப்படுகிறது.
தொடர்ந்து, ஓடிடி தளங்களிலும் வெளியாகாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து தற்போது ஜீ5 ஓடிடியில் சப்தம் வெளியாகியுள்ளது.