ஓராண்டு கழித்து ஓடிடியில் வெளியான சப்தம்!
சப்தம் திரைப்படம் ஓடிடியில்...
சப்தம் திரைப்படம் நீண்டகாலம் கழித்து ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் 'சப்தம்’ எனும் திரைப்படத்தில் தனது அறிமுக படத்தின் நாயகனான ஆதியுடன் மீண்டும் இணைந்திருந்தார்.
ஹாரர் திரைப்படமாக உருவான இது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் தொழில்நுட்ப ரீதியாக பெரிய கவனத்தைப் பெற்றது. முக்கியமாக, படத்தின் ஒலியமைப்பு பிரமாதமாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
Advertisement
Advertisement
கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நல்ல முயற்சி என்றே கருதப்படுகிறது.
தொடர்ந்து, ஓடிடி தளங்களிலும் வெளியாகாமல் இருந்த நிலையில், ஓராண்டு கழித்து தற்போது ஜீ5 ஓடிடியில் சப்தம் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.