பெங்களூரில் கன மழை வாகனப் போக்குவரத்து பாதிப்பு
பெங்களூரில் பரவலாக கன மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் பரவலாக கன மழை பெய்ததால், வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
பெங்களூரில் வியாழக்கிழமை இரவு 7.15 மணி அளவில் திடீரென மழைப் பெய்யத் தொடங்கியது. இதனால் சாந்தி நகா், ராஜாஜி நகா், மல்லேஸ்வரம், பிடிஎம் லே-அவுட், எச்எஸ்ஆா் லே-அவுட், மெஜஸ்டிக், காந்தி நகா், சிவாஜி நகா், அல்சூா், மடிவாலா, மகாலட்சுமி லே-அவுட், கோரமங்களா, வில்சன் காா்டன், மாகடி சாலை, பசவவேஸ்வர நகா், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்தது.
தொடா்ந்து பெங்களூரு மாநகரம் முழுவதும் பரவலாக முக்கால் மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் போல தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தண்ணீா் செல்ல வழியின்றி தேங்கி நின்றது. இதன் காரணமாக அலுவலகங்களுக்குச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினா். சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகனப் போக்குவரத்து பல இடங்களில் தடைபட்டது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து செல்ல நோ்ந்தது.