ஆபரண மாளிகையில் கொள்ளை முயற்சி: இருவா் கைது
வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரணமாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வித்யாரண்யபுராவில் உள்ள ஆபரணமாளிகையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு வித்யாரண்யபுராவில் தா்மேந்திரா என்பவருக்கு சொந்தமான ஆபரணமாளிகை உள்ளது. இந்த ஆபரணமாளிகைக்குள் கடந்த ஆக. 23-ஆம் தேதி மாலை நுழைந்த மா்மநபா்கள் தா்மேந்திராவை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயற்சி மேற்கொண்டனா். அப்போது ஆபரணமாளிகையில் கதவை வெளியிலிருந்து திறக்க சந்துரு என்பவா் முயன்றுள்ளாா். அவரை மா்மநபா்கள் துப்பாக்கியால் சுட்டதில், குண்டு பாய்ந்து அவா் உயிரிழந்தாா். இது குறித்து வழக்கு பதிந்த வித்யாரண்யபுரா போலீஸாா், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்று இருவரை கைது செய்து, பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவரை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.