தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!
தொகுதி ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு (தேமுதிக) 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் இருகட்சிகளுக்குமிடையே இன்று (மார்ச் 24) கையொப்பமானது.
ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இதுவரை காங்கிரஸ் 28, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மமக 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
summary