சர்வதேச விதிமீறல்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் பற்றி ஜெர்மனி அதிபர் கருத்து!
ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர் பேசியவை...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் சர்வதேச விதிகளை மீறுதலாகும் என ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர் தெரிவித்தார்.
ஜெர்மனி வெளியுறத்துறை அமைச்சகத்தின் 75-வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்வில் பேசிய ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டர் ஸ்டேய்ன்மேயர், "இந்தப் போர் பாதிப்பு மிகவும் ஆழமானது. நமது நட்பு நாடுகள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் அமெரிக்காவின் அதிகார அரசியல் மீது நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது” என்றார்.
ஈரானுக்கு எதிரான போரை அதிகாரப்பூர்வமாக ஜெர்மன் கண்டிக்காத நிலையில் ஜெர்மன் அதிபரின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், "சர்வதேச சட்ட விதிமீறலை நாம் அவ்வாறே அழைக்காததால் மட்டும் நமது வெளியுறவுக் கொள்கைகள் நம்பகத்தன்மையுடையதாக ஆகிவிடாது.
உண்மையில் இது தவிர்த்திருக்கக்கூடிய போர். மேலும், இது அரசியல் ரீதியாக பேரழிவை ஏற்படுத்திய தவறு. என்னுடைய பார்வையில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சர்வதேச சட்ட விதிகளை மீறிய செயலாகும்.
அமெரிக்கா மீது ஈரான் எப்படியும் உடனடி பதில் தாக்குதல்களை நடத்தியது எனக் கூறி இதனை நியாயப்படுத்துவது வலுவற்றது.
யதார்த்தத்தில், அமெரிக்க நிர்வாகத்துடன் நாம் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் மற்றும் நமது முக்கிய நலன்களில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நமது சொந்தக் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.
அமெரிக்க அரசிற்கு நம்மைவிட வேறுபட்ட உலகப் பார்வை உள்ளது. அது நிறுவப்பட்ட விதிகள், கூட்டாட்சி, நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு எந்த மதிப்பையும் அளிப்பதில்லை.
நாம் அதை மாற்ற முடியாது. ஆனால், அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
'Breach of international law': German president Steinmeier on US-Israeli war on Iran
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.