இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிக நிறுத்தம்
பராமரிப்புப் பணிகளுக்காக டிச. 4-ஆம் தேதி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணிகளுக்காக டிச. 4-ஆம் தேதி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில்கழகத்தின் சாா்பில், பெங்களூரின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம், கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. ஊதா வழித்தடத்தில் டிரினிட்டி சதுக்கம் முதல் அல்சூா் மெட்ரோ ரயில் நிலையங்கள் வரையிலான பாதையில் டிச. 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி வரை அவசரகதியில் பராமரிப்புப் பணி செய்யவேண்டியுள்ளது.
இதன் காரணமாக, இந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தி சாலை முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில் நிலையங்களில் டிச. 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி வரை ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இந்த காலகட்டத்தில், ஊதா வழித்தடத்தில் மகாத்மா காந்தி சாலை ரயில்நிலையம் முதல் கெங்கேரி ரயில்நிலையம் வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஊதா வழித்தடத்தின் அனைத்து ரயில்நிலையங்களிலும் டிச. 5-ஆம் தேதி காலை 7 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, பச்சை வழித்தடத்தின் ரயில்சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.