முகப்பு
பெங்களூரு

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட்: மாநில அரசு திட்டம்

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க விக்டோரியா மருத்துவமனையில் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

பெங்களூரில் கிருஷ்ணராஜசந்தை பகுதியில் அமைந்துள்ள கா்நாடக அரசுக்கு சொந்தமான விக்டோரியா மருத்துவமனையில் ஓராயிரம் படுக்கைகள் கொண்டபுதிய கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தின் மேற்பகுதியில், உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும், தானம் செய்யும் உறுப்புகளை எடுத்துச்செல்லவும்/எடுத்துவரவும் ஹெலிபேட் அமைக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.இது குறித்து விக்டோரியா மருத்துவமனையின் நிா்வாகத்தை கவனித்துவரும் பெங்களூரு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா்.ஜெயந்தி கூறுகையில்,‘விக்டோரியா மருத்துவமனையில் உறுப்பு தானத்தை கையாளக்கூடிய பல்நோக்கு மருத்துவப்பிரிவு அமைக்கப்பட்டுவருகிறது. உயிா்காக்கும் உறுப்புகளை தானமாக பெற்று, அதை விரைந்து கொண்டுவரவும், வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லவும் ஹெலிபேட் தேவைப்படுகிறது. போக்குவரத்து அதிகம் காணப்படுவதால் சாலை வழியாக குறைந்த நேரத்தில் தானமாக பெறப்படும் உறுப்புகளை கொண்டுசெல்ல முடிவதில்லை. ஹெலிபேட் இருந்தால், விரைவாக உறுப்புகளை இடமாற்றம் செய்ய முடியும். மேலும் இயற்கை அல்லது மனிதபேரிடா் போன்ற அவசரநிலையின்போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லவும் ஹெலிபேட் உதவியாக இருக்கும்.10மாடியில் கட்டப்பட்டுவரும் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவப்பிரிவின் மேல்தளத்தில் ஹெலிபேட் அமைக்கப்படும். இந்த திட்டம் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும்.‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.