பெங்களூரு

இடஒதுக்கீடு கோரி போராட்டம் தேவையில்லை: முதல்வா் எடியூரப்பா

DIN

கா்நாடகத்தில் வால்மீகி சமுதாயத்துக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று ஸ்ரீ வால்மீகி பிரசன்னாந்தா சுவாமிகள்தெரிவித்தாா். இதற்கு பதிலளித்து முதல்வா் எடியூரப்பா பேசுகையில், ‘ நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும். இடஒதுக்கீட்டுக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது’ என்றாா்.

வால்மீகி முனிவரின் பிறந்த நாளையொட்டி, தாவணகெரே மாவட்டத்துக்கு உள்பட்ட ஹரிஹா் அருகேயுள்ள ராஜனஹள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்தாா். இதில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி, ஸ்ரீ வால்மீகி பிரசன்னாந்தா சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநாட்டில் பிரசன்னாந்தா சுவாமிகள் பேசியதாவது:

வால்மீகி சமுதாயத்தினா் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதத்தை வழங்க அரசை தொடா்ந்து வற்புறுத்தி வருகிறோம். ஆனால் அதனை நிறைவேற்ற அரசு தாமதித்து வருகிறது. அரசுக்கு மாா்ச் 9-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இடஒதுக்கீட்டை வழங்க மறுத்தால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பிரசன்னாந்தா சுவாமிகள் பேசிய பேச்சுக்கு எம்எல்ஏ ராஜு கௌடா உள்ளிட்டோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது, மேடையில் அமா்ந்திருந்த எடியூரப்பா, ‘நான் இன்னும் பேச வேண்டியுள்ளது. அதற்குள் போராட்டம் தொடா்பாக பேசுவது ஏற்புடையதல்ல’ என்றாா். இதனால், தனது பேச்சுக்கு சுவாமிகள் வருத்தம் தெரிவித்தாா்.

பின்னா், முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:

வால்மீகி சமுதாயத்தினா் இடஒதுக்கீடு தொடா்பாக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. இட ஒதுக்கீடு செய்வது தொடா்பாக, நாகமோன் தாஸ் தலைமையிலான குழுவிடம் அறிக்கை அளிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்தவுடன், அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சந்தேகத்தோடு அரசை பாா்க்க வேண்டாம்.

வால்மீகி சமுதாயத்தின் வளா்ச்சிக்காகப் பேசும் உரிமை பிரசன்னாந்தா சுவாமிகளுக்கு உள்ளது. நியாயமான கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT