முகப்பு
கோப்புப்படம்
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,22,538 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,22,538 ஆக உயா்ந்துள்ளது.

பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,22,538 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,22,538 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
கோப்புப்படம்
பகிர்:

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,22,538 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 600 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 298 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,22,538 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,283 போ் திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதுவரை, கா்நாடகத்தில் 9,00,202 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 10,207 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 3 போ் திங்கள்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் ஒருவா் இறந்துள்ளாா். கா்நாடகத்தில் இதுவரை 12,110 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →